தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ புயல் சற்று நேரத்திற்கு முன் மிக தீவிர புயலாக மாறி வலுப்பெற்றது. இந்த தீவிர புயல் கோவாவிலிருந்து சுமார் 860கிமீ மேற்கு-தென்மேற்கில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
மேலும், இந்த பிபோர்ஜோய் அதி தீவிர புயலால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் சுமார் 150 கிமீ வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும் என்பதால் இம்மாநில மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது அறிவுறுத்தப்பட்டது.
- Advertisement -