இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்றிய அரசு ஆதார் அட்டை வழங்குவது போல், மாற்றுத்திறனாளிக்கும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், ” நாடு முழுவதும் 94.30 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேற்குவங்கத்தில் மட்டும் தொய்வு பெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்
- Advertisement -