மணிப்பூரில் கடந்த மாதம் இரு சமூகத்தினர் இடையே கடும் மோதல் வெடித்து அம்மாநிலம் முழுவதிலும் பயங்கர வன்முறை வெடித்தது. இதனால் பலர் உயிர் , பொருள், வீடு ஆகியவற்றை இழந்தனர். இதையடுத்து, இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு ராணுவத்தை அனுப்பி இந்த வன்முறையைத் தடுக்க நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில், இந்த மணிப்பூர் கலவரத்தால் காயமடைந்த சிறுவனுடன் (8) இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 10 காவலர்களின் பாதுகாப்பில் ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் உறவினரை,ஐரோசெம்பா பகுதியில் ஆம்புலன்சை மறித்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியரை விரட்டிவிட்டு, ஆம்புலன்சுக்கு தீ வைத்து தாய், மகனை உயிருடன் எரித்து கிளர்ச்சியாளர்கள் கொன்றது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -