கேரளாவில் உள்ள தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்து வந்தது.
இந்நிலையில், “2018” என்ற மலையாள திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 33 நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியாவதால் இதைக் கண்டித்து இன்றும் (ஜூன் 7), நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனால், மக்கள் திரையரங்குகளில் இன்றும், நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அப்படம் திருப்பி கொடுக்கப்படும் என தியேட்டர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -