சிவ வழிபாட்டிற்கு உகந்த நான் சிவராத்திரி. இது மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி நாளாகப் பாவிக்கப்படும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும், காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது, ‘உபாயம் நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். மஹாசிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். அதைப்போல், இந்த சிவராத்திரியன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களைக் காட்டிலும் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும்.
- Advertisement -