மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், எரிவாயு ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இதனால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே துறை தகவல் அளித்தது. மேலும், இந்த ரயிலில் LPG எரிவாயுவை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கில் நிரப்புவதற்காகச் சென்றபோது இவ்விபத்து ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒடிசா பகுதியில் ஏற்பட்ட கோர விபத்து ஏற்படுத்தியத் தாக்கம் முடிவதற்குள், அடுத்தடுத்து வடநாட்டில் சரக்கு ஏற்றி வரும் ரயில்கள் தடம்புரண்டு வரும் செய்தி மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
- Advertisement -