கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதிகளில் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் அடுத்தடுத்து 3 ரயில்கள் இடித்து மிகப் பயங்கர விபத்தானது. இதில் 300க்கு மேற்பட்டோர் பலியானார்கள், 1000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைத்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
மேலும், இந்த ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் சுமார் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு என ரயில்வே போலீசார் சற்றுமுன் பரபரப்பு தகவல் அளித்தனர். ஏனென்றால், விபத்தின் போது ரயில்களின் பெட்டிகள் வீசி எறியப்பட்டத்தில், உயரத்தில் செல்கிற மின்சாரக் கம்பிகள் அறுந்து, பெட்டிகளில் விழுந்துள்ளது. அதில் இறந்த 40 பேரது உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால், அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என, விபத்து தொடர்பாக விசாரிக்கும் ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்
- Advertisement -