கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்திருந்தது. இதற்கு வரும் செப்டம்பர் மாதம் வரை பொதுமக்கள் வங்கிகளில் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் அளித்தது. மேலும், இந்த ரூ .2000 நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், இதுவரை 82% இந்தியர்கள், ரூ. 2000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளதாகவும், வங்கியில் கொடுத்து மாற்றுபவர்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகவும் எஸ்.பி.ஐ வங்கி தகவல் அளித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி ரூ . 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவித்த முதல் வாரத்தில் மட்டும், 17,000 கோடி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -