காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ”நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் கட்சிகள் தாமாக முன் வந்து உதவ வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், ”பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இதற்கு யார் காரணம் எனப் பதில் சொல்ல வேண்டும். அதைப்போல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
- Advertisement -