நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது அதில் ”தவறான சிக்னல் கொடுத்ததே இந்த விபத்து ஏற்படக் காரணம்” என 4 பேர் கொண்ட முதற்கட்ட விசாரணையில் தகவல் வந்துள்ளது. அதன்படி, சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்தானதால், லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. இதனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்ததால், அவ்வழியே வந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ்-ம் இவ்விபத்தில் சிக்கியுள்ளது என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -