ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ள ஒடிசா மாநிலத்திற்குச் சென்றடைந்தார். பின்னர், மோடி இவ்விபத்து நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒன்றிய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பலர் இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தற்போது, ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரிக்க கட்டாக் மருத்துவமனைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு சிகிச்சை பெறுவோர்களை பார்வையிட்டு, உடல் நலனை விசாரித்து வருகிறார்.
- Advertisement -