பொதுவாக இந்த கோடைக் காலம் மட்டுமல்ல, எந்த காலத்திலும் நாம் அக்குள் பகுதியைச் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். ஏனென்றால், நம் உடலில் சுரக்கும் வியர்வை மூலமாகப் பாக்டீரியா, துர்நாற்றம் முதலியன அப்பகுதியில் ஏற்பட்டு, அதனால் பல பிரச்சனைகள் வருவதற்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், இந்த அக்குள் பகுதியில் ஏற்படும் அதிக பாதிப்பைத் தீர்க்க நீங்கள் செய்யவேண்டியது, முதலில் அந்த அக்குளைச் சுத்தமாக வைப்பதன் மூலம் நாம் நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். அதற்கு உதவுகிறது எலுமிச்சை சாறும், தேனும். இவை இரண்டையும் சேர்த்து அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடங்களுக்குப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது, அக்குள் பகுதியைத் தூய்மையாக்கி, பருக்கள் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.
- Advertisement -