முதலில் நீங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு முட்டக் குடிக்கக் கூடாது. இதனால் ஜீரண நீர் தீர்ந்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும். அதைப்போல், நீங்கள் சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.
மேலும், சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் செயல்பட மிகவும் சிரமப்படும், அதனால் ஜீரணம் முறையாக நடக்காது. நீங்கள் குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும். அதைப்போல், சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்
- Advertisement -