தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால், தோல் வறட்சி நீங்கும், உடல் வலி சோம்பல் தீரும், அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக் கூட கட்டுப்படுத்தும். அதே போல் , உங்கள் குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பதால் உடல் எடை, சரும வனப்பு, குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பல நலக்கூறுகளை எண்ணெய் மசாஜ் குளியல் அதிகரிப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அன்றைய காலத்தில் பல நாட்களில் எண்ணெய் குளியல் போடுவதற்கு நேரம் இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் பண்டிகை நாட்களில் மட்டும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முன்னோர்கள் வைத்த மருத்துவத்தை நாம் எந்த ஒரு சூழ்நிலையில் மறந்து விடக் கூடாது.
- Advertisement -