தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரலில் நடந்த தேர்த் திருவிழாவில், தேரின் மேல் பகுதியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து, இனி மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் தேர் செல்லும் பாதைகளில், மின் கம்பத்திற்கு மாற்றாக, தரை அடி கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதனால், தமிழகத்தில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முதற் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் மூலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன
- Advertisement -