இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். இதில் பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் தேசிய மருத்துவ ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் அடங்கும் எனத் தெரிவித்தது.
ஏனென்றால், இந்த மருத்துவக் கல்லூரிகளில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றாதது, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு இல்லாதது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கமளித்தது.
- Advertisement -