நாம் கோவிலில் தூங்கக் கூடாது , நம் தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது, கோயிலில் உள்ள கொடிமரம்,நந்தி,பலிபீடம்,இவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது, நீங்கள் விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது ) வணங்கக் கூடாது கோயில் அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது, நீங்கள் குளிக்காமல் கோவில் போகக்கூடாது, கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது , கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.
மேலும், கோயிலில் எந்த மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது, கோவிலுக்குச் சென்று திரும்பிய உடன் கால்களைக் கழுவக் கூடாது, படிகளில் உட்காரக் கூடாது, சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது, வாசனை இல்லாத மலர்களைப் பூஜைக்கு அல்லது கடவுளுக்குத் தரக் கூடாது, மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளைக் கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது, கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக் கூடாது போன்ற பல விஷயங்கள் கோயில் பூசாரிகள் தெரிவித்தனர்