ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டில், வாரம் தோறும் செய்யும் பூஜையோடு சேர்த்து இந்த பூஜையையும் தொடங்கிக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைக் காகிதத்தில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெயர் எத்தனை தெரியுமோ, அத்தனையையும் அந்த பேப்பரில் எழுதி வைக்க வேண்டும்.
அதன் பின்பு ஒரு வெள்ளைத் துணியை எடுத்து அதில் வெற்றிலை நான்கு, பாக்கு இரண்டு, ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை மஞ்சள் தூளில் கலந்த அட்சதை, ஒரு கைப்பிடி அளவு நெல், ஒரு ரூபாய் நாணயம், இரண்டு விரலி மஞ்சள், இவைகள் அனைத்தையும் ஒன்றாக வைத்து, அதில் நீங்கள் எழுதி வைத்திருக்கும் முன்னோர்கள் பெயரைக் கொண்ட காகிதத்தையும் அந்த வெள்ளை துணியில், ஒரு முடிச்சாகக் கட்டி, உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை முதலில் வேண்டி, அதன் பின்பு முன்னோர்களையும் வேண்டி வழிபடுங்கள்.
இப்படிச் செய்வதால் உங்கள் குடும்பத்திற்குச் சகல சௌபாக்கியம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.