டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி வரும் மே 28ஆம் தேதியன்று திறந்து வைக்கிறார். ஆனால், நாட்டின் முதல் குடிமகனாகக் குடியரசுத் தலைவர் தான் இந்த நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
தற்போது, இன்று (மே 26) இந்த வழக்கை நீதிபதிகள் மகேஷ்வரி, நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விசாரிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதனால், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.