டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார். இந்நிலையில், நேற்று (மே 25) இவர் சிறையிலிருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதை அறிந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த ஜாமின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது