ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் போன்ற பல சில்லறை வர்த்தங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி பில் போடும் போது கவுண்டர்களில் இருக்கும் பணியாளர்கள் கஸ்டமர்களிடம் மொபைல் எண் கேட்டுப் பதிவு செய்துவருகின்றனர். ஏனென்றால், இந்த மொபைல் எண்ணைக் கொடுத்தால் மட்டுமே பில் ஜெனரேட் செய்ய முடியும் முறை பல கடைகளில் பின்பற்றப்படுகிறது.
இந்த முறை மூலம் தங்கள் கடைகளின் ஆஃபர்கள், சிறப்பு அம்சங்கள், போனஸ் பாயிண்ட்ஸ் போன்றவற்றை அனுப்பவே வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பல பேர் தங்களது எண்ணைத் தரவே தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனென்றால், மொபைல் எண்ணைப் பிறரிடம் ல சைபர் மோசடிகள் நடப்பதாகவும் புகார் வருகிறது.
இதன் காரணமாக, இனி சில்லறை வர்த்தக கடைகளில் பொருட்கள் வாங்கி பில்போடும்போது, வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணைக் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது.
- Advertisement -