டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் மோடி தலைமையில் திறக்கப்படுகிறது. இதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் ஆதன குழுக்கள் வழங்கும் ‘செங்கோல்’ புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.
அதன்படி, மே 28ம் தேதி நடக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இந்த செங்கோல் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பு நிறுவப்பட உள்ளது. மேலும், இது சுதந்திரத்தின் போது நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த விழாவில் 19 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இவ்விழாவில் அழைக்கப்படாததைக் கண்டித்து இந்த விழாவைப் புறக்கணித்து உள்ளனர்.
- Advertisement -