இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் கையில் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், இந்தியாவில் முதலில் ரூ. 2000 நோட்டுகளால் ஊழல் ஒழியும் என்றார்கள். இப்போது அதை ஒழித்தால் தான் ஊழல் ஒழியும் எனக் கூறுகிறார். அதனால்தான் படித்தவர் பிரதமராக வேண்டும் என்றோம். பொதுமக்களின் கஷ்டங்கள் அவருக்குப் புரியாது கடும் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக எம்.பி கவுதம் கம்பீர் அவர்கள், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அவரின் துணை முதல்வரே ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும்போது, பயன்படுத்தும் மொழி இது எனக் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.
- Advertisement -