கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாகக் கடந்த மே 10 ஆம் தேதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் மே 13ல் வாக்கு எண்ணிக்கை நடந்தது, அதில் 135 இடங்களைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா , டி.கே. சிவகுமார் ஆகியோர் இடையே யார் முதலமைச்சராவது என்ற போட்டி நிலவிவந்தது.
இதனால், இவ்விருவரையும் டெல்லி அழைத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா , துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் இன்று (மே 20) பெங்களூரில் பதவியேற்க உள்ளனர். மேலும், இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- Advertisement -