- Advertisement -
தென்கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் (Krafton) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பப்ஜி விளையாட்டு, இந்தியாவில் அதீத வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல சீன ஆப்களை தடை செய்தது இந்திய அரசு. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டை வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது.
அப்போது இந்த பிஜிஎம்ஐ விளையாட்டுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் தடை விதித்தது இந்திய அரசு. இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு. இது 3 மாதம் சோதனை அடிப்படையிலான அனுமதியை மட்டுமே தற்சமயம் இந்தியாவிடம் பெற்றுள்ளது என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -