இந்த ஜி7 மாநாடு என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். இந்த குழு உலகிலேயே சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். அதன்படி, இந்த ஜி7 மாநாடு இன்று (மே 19) ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடக்கிறது.
பொதுவாக இந்த ஜி7 மாநாட்டில் உலகில் உள்ள பல பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள். மேலும், இந்த மாநாடு உலகின் பொருளாதாரத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருளாதாரம் கொண்ட 7 நாடுகள் மட்டும் பங்கேற்கும் கூட்டமாக இருந்தது. ஆனால், தற்போது சீனா , ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செல்லும்போது, இந்த ஜி7, க்வாட் உச்சி மாநாடுகளில் பங்கேற்கவுள்ளார். அதற்காக தற்போது மோடி ஜப்பான் நாட்டுக்குப் மோடி புறப்பட்டுச் சென்றார்.