கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் மே 13ல் வாக்கு எண்ணப்பட்டு 135 இடங்களை கைப்பற்றி பெருபான்மையுடன் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள், இவ்விருவரையும் டெல்லி அழைத்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பட்ட இந்த இருவரில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அதேசமயம், துணை முதலமைச்சராகவும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் டி.கே.சிவகுமார் இருப்பார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.