பொதுவாக பட்டு துணிகளுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டுக்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும். தீய கதிர் வீச்சுகளை ( நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள் போன்றவற்றை) தடுத்து உடலுக்கு வலிமை அளிக்கும் ஆற்றல் உண்டு. ஆகவே, திருமண வீட்டுக்கு பல தரப்பட்ட நபர்கள் வருகின்றனர். அதில் யார், எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண், மணமகனுக்கு ஆரோக்கியமான வாழ்வு வேண்டும், தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.
இதுகுறித்து வெளிநாடுகளிலும் தற்பொழுது ஆய்வு நடக்கிறது. இந்த பட்டு சேலையை கோவில்களுக்கு செல்லும் பொழுதும் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே பலர் அணிந்து வருகின்றனர். ஆனால், இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று பலருக்கும் நம் பாரம்பரியம் தெரிவதில்லை. இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் விஞ்ஞான ரகசியமும், உண்மை பொருளும் கலந்தே இருக்கின்றன.