Wednesday, May 31, 2023 2:52 am

திருப்பதி கோயிலில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்கூடாது என்பதற்கான காரணம் என்ன?

இங்கு மழை பொழியும் போது பலத்த இடி இடிக்கும், அப்போது கோயில்...

கோவிலில் செய்ய கூடாத சில விஷயங்கள்

நாம் கோவிலில் தூங்கக் கூடாது , நம் தலையில் துணி, தொப்பி...

முன்னோரை வழிபட்டால் சகல நன்மைகள் நடக்கும்

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டில், வாரம் தோறும் செய்யும் பூஜையோடு...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் வரும் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இந்த கோடை விடுமுறையால் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைபோல் திரண்டு வருகிறது. இதனால் எந்தவித டிக்கெட்டுகளும் இல்லாமல் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ரூ.300 டிக்கெட் இணையத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் பெறும் பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக, இனி வரும் ஜூன் 15ம் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாகத் திருப்பதி தேவஸ்தானம் செயல் அதிகாரி தர்மா சற்றுமுன் அறிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்