Wednesday, May 31, 2023 3:31 am

பிரதோஷம் தோன்றியது எப்படி?

spot_img

தொடர்புடைய கதைகள்

கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்கூடாது என்பதற்கான காரணம் என்ன?

இங்கு மழை பொழியும் போது பலத்த இடி இடிக்கும், அப்போது கோயில்...

கோவிலில் செய்ய கூடாத சில விஷயங்கள்

நாம் கோவிலில் தூங்கக் கூடாது , நம் தலையில் துணி, தொப்பி...

முன்னோரை வழிபட்டால் சகல நன்மைகள் நடக்கும்

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டில், வாரம் தோறும் செய்யும் பூஜையோடு...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் வரும் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர...
- Advertisement -

சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். ஆகவே, உங்களுக்கு சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நீங்கள் நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். மேலும், இந்த பிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். பின்னர் நந்தியின் காதுகளில் நமது பிரச்சனைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.

அதைபோல், பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம். அதனால் தான் இந்த பிரதோஷ பூஜையில் நந்திக்கு முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், இந்த பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி, தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம் என முன்னோர்கள் தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்