கடந்த அக்டோபர் 2, 2021ஆம் ஆண்டில் மும்பை கடற்கரையில் உள்ள கோர்டேலியா என்ற கப்பலில் போதை பொருள் சப்ளை செய்வதாக வந்த ரகசிய தகவலின்படி சோதனை செய்த என்சிபி அதிகாரிகள் , இதில் 13 கிராம் கோகோயின், 5 கிராம் மெபெட்ரான், 21 கிராம் கஞ்சா, 22 எம்.டி.எம்.ஏ (எக்ஸ்டஸி) மாத்திரைகள், ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்ததாகவும், அதைத் தொடர்ந்து ஆர்யன் கான் உட்பட 17 பேரை கைது செய்தனர் .
அபபோது நடந்த சோதனையின் போது மும்பையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) தலைவராக இருந்தவர் வான்கடே. இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இந்த போதை வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க ரூ .25 கோடியை ஷாருக்கானிடம் பேரம் பேசப்பட்டதாக கூறி கடந்த வாரம் வான்கடே உட்பட 4 பேரிடம் மத்திய ஏஜென்சி எஃப்ஐஆர் போடப்பட்டது.
இந்த குற்றசாட்டு காரணமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடேவுக்கு தற்போது சிபிஐ இன்று (மே 18) சம்மன் அனுப்பியுள்ளது.