Wednesday, May 31, 2023 3:29 am

எந்த மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்கூடாது என்பதற்கான காரணம் என்ன?

இங்கு மழை பொழியும் போது பலத்த இடி இடிக்கும், அப்போது கோயில்...

கோவிலில் செய்ய கூடாத சில விஷயங்கள்

நாம் கோவிலில் தூங்கக் கூடாது , நம் தலையில் துணி, தொப்பி...

முன்னோரை வழிபட்டால் சகல நன்மைகள் நடக்கும்

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டில், வாரம் தோறும் செய்யும் பூஜையோடு...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் வரும் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர...
- Advertisement -

சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே சில சுபகாரியங்களை செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி, சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். அப்படி செய்வதால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர் மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும் என்பது ஐதீகம்.

அதைபோல், இந்த சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையைத் துவங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். மேலும், இந்த சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் கிணறு வெட்டினால் அது என்றும் வற்றாது என நம்பிக்கை

இந்த புரட்டாசியில் வரும் விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் துவங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். ஆனால், இந்த ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது. பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

மேலும், நீங்கள் ஏதாவதொரு மாதத்தில் 2 அமாவாசைகள், 2 பவுர்ணமிகள் வருமானால் அம்மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யக்கூடாது என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்