பொதுவாக மக்கள் சிவப்பிரதோஷங்கள் அன்று கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவர். அப்படி நீங்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்கள் பார்த்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் பார்ப்பதற்கு சமம் என்றும், 5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் நீங்கும் என்றும், 7 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் என்றனர்.
மேலும், நீங்கள் 11 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும் மனமும் வலிமைபெற்று புத்துணர்வு பெரும் என்றும், 13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் சிறப்பாக நடக்கும். அதைபோல், நீங்கள் 21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். 33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவாலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
அதேமாதிரி 77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்திரயாகம் செய்த பலன் கிடைக்கும்.108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும்.121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது. கடைசியாக 1008 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு அஷ்வதமேதயாகம் நடத்தியதற்கு சமம்.