- Advertisement -
பொதுவாக ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக்கொண்டு போயிருக்கும். அதனால் அங்கே நீர், நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை அடையும்.ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச்செய்தார்கள்.
அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும்? என்கிறீர்களா. இந்த ஈர களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்றுவிடும். அதுவே சற்று காய்ந்த களிமண் அந்த நீரின் வேகத்தை தாங்கிகொண்டு அதே இடத்தில் படிந்துவிடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியின் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். எப்படி நம் முன்னோர்களின் சாமர்த்தியம்? அசத்தலாக இருக்கிறது அல்லவா.
- Advertisement -