- Advertisement -
இனி இந்தியவில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியான, பெயர் பலகை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தின் அளவு, உருவம், வண்ணம் ஆகியவற்றை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இதுகுறித்த திட்ட விவரங்கள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அதில் ‘அமிர்த் பாரத் ஸ்டேஷன்ஸ் திட்டத்தின்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 1,275 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து வரும் இந்திய ரயில்வேயில் இனி பெயர் பலகையில் ஒரே மாதிரியாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -