கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 224 தொகுதியில் 135 தொகுதியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெருபான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் தற்போது யாரை முதல்வராக்காலம் என நேற்று கர்நாடக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள சாங்கிரிலா ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிடமே யார் முதல்வர் என தேர்வு செய்யட்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் இன்று டெல்லி வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. இதனால், இன்று சித்தராமையா பிற்பகல் டெல்லி சென்றார். ஆனால், டி.கே.சிவக்குமார் அவர்கள் இன்று பிறந்த நாள் என்பதால் செல்லவில்லை என்றார். ஆனால், டி.கே.சிவக்குமார் தற்போது மனம் மாறி டெல்லி செல்வதாக கூறியுள்ளார்.