இன்று (மே 15) காலையில் குளிர்சாதன வசதியுடன் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்ல கூடிய இரட்டை அடுக்கு ரயிலானது, தமிழகம் – கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் என்ற இடத்தில் திடீரென தடம் புரண்டது. இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இருக்கிறது.
ஆனால், அதிஷ்டவசமாக இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என தகவல் வந்தது. மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்ட போது, இந்த ரயிலில் விபத்தான அந்த பெட்டியை மட்டும் எடுத்து விட்டு, மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு பெங்களூர் நோக்கி சென்றது என்றும், குப்பம் காவல்துறையினர் மற்றும் பங்கார்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.