டெல்லியில் பெண்களுக்காக மட்டுமே அழகிய “பிங்” பூங்காக்கள் 250 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதில் ஆண்கள் இந்த பூங்காக்களில் வர அனுமதி இல்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பூங்காவில் பச்சை பசேலென இயற்கை எழிலும், சிசிடிவி கேமராக்கள், உடற்பயிற்சிக்கான வசதிகள், வண்ணம் தீட்டப்பட்ட சுவர் மற்றும் அடிப்படை வசதிகளும் ஆகியன அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பிங்க் பூங்காக்கள் அமைக்க இடங்களை தேர்வு செய்து இருப்பதாகவும், இதற்காக முதல்வர் கெஜ்ரிவாலிடம் அனுமதி வாங்கிருப்பதாக டெல்லி துணை மேயர் ஆலே முகமது இக்பால் கூறியுள்ளார். மேலும், இது பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இந்த பூங்காக்கள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு முதல்கட்ட சோதனை முயற்சியாக ரமா லீலா மைதானம் அருகே இந்த பிங்க் பூங்கா திறக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.