கென்யா நாட்டில் வாழும் உலகிலேயே வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உள்பட 10 சிங்கங்கள் கொல்லப்பட்டு உள்ளன என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து அங்குள்ள ஊடகத்துறை தரப்பில், கென்யாவில் உள்ள தேசிய பூங்காவில் வாழ்ந்த லூன்கிடோ என்ற வயதான ஆண் சிங்கம் ஒன்று உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்ற போது, அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்களால் அச்சிங்கம் ஈட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது என்றனர்.
மேலும், இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பாளரின் அதிகாரியான பவுலா அவர்கள், இது மனிதன் – விலங்கு இடையே உள்ள மோதலின் விளைவாகும் என்றும், இந்த சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருத்தமாக கூறியுள்ளார்.
மேலும், இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் என்றும், அந்த சிங்கங்கள் எல்லாம் உணவை தேடும் முயற்சியில் ஊருக்குள் சென்றதால் கிராம மக்களால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வனத்துறை தெரிவித்துள்ளது.