உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் கார்பரேட் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை வேறு நாட்டில் போட்டு அங்கு நிறுவனங்களை நிறுவி வெற்றிகரமாக செயல்பட்டு வரும். இதனால் பல கோடி லாபங்களை அந்நாட்டில் சம்பாதித்து வரும். இதனால், அந்நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரிக்கும். இதன் காரணமாக பல நாட்டு கார்பரேட் நிறுவனங்கள் வேறு நாட்டில் தங்களது முதலீடை செய்து வருவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது இந்திய நிறுவனங்கள், கனடாவில் சுமார் ரூ. 40,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) சற்றுமுன் அறிக்கையில் தகவல் அளித்துள்ளது. மேலும், இதுவரை 8 கனடா மாகாணங்களில், 30 இந்திய நிறுவனங்களில் சுமார் 17,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது