பாகிஸ்தானில் சில நாட்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏனென்றால், ஏற்கனவே அங்கு பொருளாதார மந்த நிலை, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது, அதனால் ஏற்பட்ட வன்முறை, போராட்டம், பின்னர் இம்ரான் கான் விடுதலை என அங்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அதில் அவர், ” பாகிஸ்தான் ராணுவம் நான் சிறையில் இருந்தபோது வன்முறையை சாக்குப்போக்காக பயன்படுத்தி மரண தண்டனை விதிக்க முயன்றது, அது நடக்கவில்லை. அதனால் தற்போது என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டை சுமத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிடுகின்றனர்” என்றார். மேலும், அவர் என் உடலில் கடைசி துளி ரத்தம் உள்ள வரை, நாட்டு மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என சூளுரைத்துள்ளார்.