இந்தி இயக்குனரான சுதிப்டோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது . இதில் காட்டப்படும் பெண்களை கடத்தி அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பின் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக பல மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆனாலும் எதிர்ப்பையும் மீறி இப்படம் நாடு முழுவதும் வெளியானது.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்கம் மாநிலத்தில் தடை செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து டெல்லி உச்சநீதிமன்றம், மற்ற மாநிலங்களில் திரையிடும் போது ஏன் மேற்கு வங்கத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், . மேற்குவங்க மாநிலம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வித்தியாசப்பட்டது கிடையாது என கூறி வரும் மே 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்து பதில் அளிக்க வேண்டி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.