மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 21 வரை நடைபெற்றது.இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஏற்கனவே இன்று (மே 12) 12 ஆம் தேர்வு பொதுத்தேர்வு வெளியான நிலையில்,தற்போது 10ஆம் பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று சற்றுமுன் வெளியானது.
இதில் 93.12 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த சிபிஎஸ்இ-யில் வழக்கம் போல் யார் முதலிடம் என்பதை அறிவிக்கவில்லை. ஏனென்றால், மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க வேண்டியே எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.எனினும், பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றனர்.
மேலும், கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 5.38% குறைந்துள்ளது. இதில் 99.91% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. 98.64% உடன் பெங்களூரு 2ம் இடத்திலும், 97.40% உடன் சென்னை 3ம் இடத்திலும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.