இந்தியாவில் பல வர்த்தகம் எல்லாம் தற்போது ஆன்லைன் மையமாக உள்ளது. அதிலிலும், குறிப்பாக பெண்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பொருட்களை வாங்க அதிகம் விரும்புகின்றனர். அவர்களுக்காகவே அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் இயங்கி வருகின்றன. இந்த தளங்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்தும் கிடைக்கும்.
இந்நிலையில், தற்போது கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை, ஆன்லைன் வர்த்தக தளங்களில் விற்பனை செய்ய மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. ஏனென்றால், சீட் பெல்ட் பயன்பாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள இந்த க்ளிப்களை உடனடியாக நீக்க அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னேப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய 5 தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.