- Advertisement -
தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்துவது வழக்கம் தான். அந்தவகையில், இந்த 2022-2023 ஆம் ஆண்டின் கலந்தாய்வு கடந்த மே 8 ஆம் தேதியில் நடக்க இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என சற்றுமுன் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -