தமிழகத்தில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் மாணவியின் மொபைல் பேடிஎம் செயலி மூலம் ஆக்ட்டிவ் செய்யப்பட்டு இருக்கும் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் மயமாகியுள்ளது. இதுகுறித்து அம்மாணவி சென்னை உயர்நிதிமன்றத்தை நாடினார். அதில், Paytm கணக்கிலிருந்து காணாமல் போனதால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என வங்கி தரப்பு தனது வாதத்தை வைத்தது. அதைபோல், வங்கிக் கணக்கு விவரத்தை பகிராமல் பண பரிவர்த்தனை நடைபெறாது என Paytm தனது எதிர்வாதம் வைத்துள்ளது. மேலும், இரண்டு தரப்பும் தீர விசாரணை நடத்தியது நீதிமன்றம்.
இந்நிலையில், இவ்விருதரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிமன்றம், இதன் முடிவில் 2 வாரங்களில் பணத்தை திருப்பியளிக்க வேண்டும் என Paytm நிறுவனத்திற்கு உத்தரவிட, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.