வங்கக்கடலில் கடந்த மே 8ஆம் தேதியில் புதிய காற்றழுத்தம் தாழ்வு பகுதி உருவானது. இதையடுத்து, இந்த தாழ்வு பகுதி மே 10 ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த மண்டலம் புயலாக மாறியதை ஒட்டி இதை மோக்கா புயல் என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயலால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பில்லை என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.
மேலும் , இந்த புயல் வடக்கு -வடகிழக்கு பகுதியில் கரையே கடக்கும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த அதி தீவிர புயல் நேற்று (மே 14 ஆம் தேதியில்) வடகிழக்கு பகுதியில் உள்ள மியான்மரில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி மழை பெய்தது இந்த மோக்கா புயல் கரையை கடந்தது. தற்போது மியான்மரில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது. இதனால் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் அளித்துள்ளது.