நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற குற்றவாளிகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் வந்திருந்தன. இதனால், இந்த புகாரில் சம்மந்தப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இதில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் சேர்த்தப்பட்டனர். அதைபோல், உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது ஏற்கனவே 3 வழக்குகள்போடப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி. அது ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரின் பேரில், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.