இந்த கோடை காலத்தில் தமிழகத்திலுள்ள பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு மேலடுக்கு சந்திப்பால் நிகழ்ந்த காற்றின் ஈரப்பததால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அநேக பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (மே 8) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.