தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு முடிந்து 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மக்கள் தங்களது குடும்பத்துடன் கோடை விடுமுறையை உற்சாகமாக பல குளிர் பிரதேசத்திற்கு சென்று விடுமுறையை செலவழித்து வருகின்றனர். இதன் காரணமாக பல ஊர்களில் உள்ள டூரிஸ்ட் ஸ்பாட் உள்ள பகுதிகள் அனைத்து நாட்கள் திறந்து இருக்கின்றன.
அந்த வகையில், தற்போது இந்த கோடை விடுமுறையை முன்னிட்டு, மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், சென்னையில் உள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என வண்டலூர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏனென்றால், வண்டலூர் பூங்கா ஒவ்வொரு வாரமும் வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை தினமாக இருக்கும். அந்த நாள் தற்போது இந்த மாதம் முழுவதும் திறந்திருக்கும் என கூறி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது